புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2016

வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தாய் மற்றும் மகனிற்கு இலங்கையில் காத்திருந்த சோகம்

புத்தாண்டை கொண்டாட வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தாயும் மகனும் ரயில் விபத்தில் பலி!

அம்­ப­லாங்­கொட, ரயில் கட­வையில் நேற்று முன்­தினம்
மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று ரயி­லுடன் மோதுண்டு விபத்­துக்­குள்­ளா­னதில் தாயும் மகனும் உயி­ரி­ழந்­துள்­ளனர்.
ரயில் கட­வை காவ­லா­ளியின் ஆணையை மீறி ரயில் வரு­வதை அவ­தா­னித்து கொண்டே குறித்த பெண் கட­வையின் ஊடாக மோட்டார் சைக்­கிளை செலுத்த முற்­பட்­ட­போது மாத்­த­றை­யி­லி­ருந்து கொழும்பு நோக்கி பய­ணித்து கொண்­டி­ருந்த கடு­கதி ரயிலால் மோதுண்டு விபத்­துக்­குள்­ளாகி உயி­ரி­ழந்­துள்­ளனர் என தெரி­ய­ வந்­துள்­ளது.
சம்­ப­வத்தில் உத­யங்­கனி கோமஸ் என்ற 28 வய­தான பெண்ணும் சமித் என்ற 6 வய­தான அவ­ரது மக­னுமே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இவர்கள் வெளி­நா­டொன்றில் வசித்து வந்­தி­ருந்த நிலையில் புத்­தாண்டை முன்­னிட்டு குறித்த இலங்கை வந்­துள்­ளனர் எனவும் புத்­தாண்­டுக்­காக ஆடைகள் வாங்­கு­வ­தற்­காக சென்று கொண்­டி­ருந்த போதே இவ்­வி­பத்து இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
உயி­ரி­ழந்த பெண்ணின் கணவர் இலங்கை வரு­வ­தற்­காக புறப்­பட்டு விமா­னத்தில் வந்து கொண்­டி­ருந்த வேளையில் இவ்­வி­பத்து இடம்­பெற்­றுள்­ள­துடன் அவர் இலங்கையை வந்தடையும் வரை தனது மனைவியும் மகனும் உயிரிழந்தமை தொடர்பில் அறிந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.mother_dotermother_doter01mother_doter02mother_doter03

ad

ad