புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2016

இன்று ஜெயலலிதா பிரசாரம்:பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: தயார் நிலையில் மருத்துவக் குழு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் பிரசாரக் கூட்டம் வாலாஜபாத் அருகே உள்ள வாரணவாசி
பகுதியில் திங்கள்கிழமை (ஏப்.18) நடைபெறுகிறது. இதற்காக தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் சோழிங்கநல்லூர், ஆலந்தூர் தொகுதி வேட்பாளர்களை ஏற்கெனவே முதல்வர் ஜெயலிலதா சென்னையில் அறிமுகப்படுத்தி வைத்துவிட்டார்.
மீதமுள்ள காஞ்சிபுரம், உத்தரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம், செய்யூர், செங்கல்பட்டு, திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம் ஆகிய 9 சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர்களையும், திருவள்ளூவர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 9 சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து இக் கூட்டத்தில் பேசுகிறார்.
முதல்வர் ஜெயலலிதாவின் வருகையையொட்டி சுமார் 50,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அமரும் வகையில் தேர்தல் பிரசார மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிகளுக்காக 1000-க்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவக் குழுக்கள்: பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டாலோ, யாருக்கேனும் உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மைதானம் அருகில் அவரச ஊர்திகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கான மொபைல் கழிவறை, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் வரிசையில் செல்ல தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் மூலம் மாலை 5 மணி அளவில் கூட்டத்துக்கு வரும் முதல்வர் ஜெயலலிதா, பிரசாரத்தை 6 மணிக்கு முடித்து கொண்டு பின்னர் கார் மூலம் சென்னை திரும்புகிறார்.
முதல்வரை வரவேற்க மாவட்டச் செயலர் வாலாஜபாத் பா.கணேசன் தலைமையில் அக் கட்சியினர் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்

ad

ad