புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2016

சென்னையில் மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை

சென்னை வடபழனியில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் மாடியிலிருந்து குதித்து பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது
அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிஸினஸ்மேன் ஹரி. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். இவரது மூத்த மகள் நிவேதா. இவர் பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு, பன்னிரண்டாம் வகுப்புக்காக ட்யூஷன் சென்றுவந்தார். 

இந்நிலையில் ட்யூஷன் சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தந்தனர். இதுகுறித்த விசாரித்த போலீசார், வடபழனியிலுள்ள தனியார் வணிக வளாக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டவர் நிவேதா என்பதைக் கண்டறிந்தனர். மாணவியின் மரணத்துக்கான காரணம் குறித்து, வடபழனி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad