புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2016

திமுகவினரின் வீடுகளிலும் ஜெயலலிதா வாழ்கிறார்! -அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பெருமிதம்!



விருதுநகர் மாவட்டம் – திருத்தங்கல்லில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிவகாசி தொகுதியின் வேட்பாளரும் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசிய போது, “அதிமுகவை எதிர்த்து போட்டியிடும் அத்தனை வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். திமுகவினரின் வீடுகளில் கூட, திட்டங்கள் வாயிலாக அம்மாவின் உருவப்படம் இருக்கிறது. அவர் அங்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தனது கணவரை கட்டுப்படுத்த முடியாத பிரேமலதா அடுத்தவர் பற்றி அவதூறு பேசி வருகிறார். சால்வை போடும் கட்சி நிர்வாகிகளை அடிக்கும் விஜயகாந்தை நம்பி மக்கள் நலக்கூட்டணி சென்று கொண்டிருக்கிறது. விஜயகாந்தை முதல்வராக ஏற்றுக்கொண்டுள்ள வைகோவின் நிலைமை இன்று மோசமாக இருக்கிறது. கவுன்சிலருக்கு இருக்கும் தகுதி கூட இன்று விஜயகாந்துக்கு இல்லை. சட்டமன்றத்தில் பேச முடியாத விஜயகாந்த், ஸ்டாலின் போன்றவர்கள் வெளியில் வந்து  வாய்ச் சவடால் விடுகின்றனர்.  வரும் தேர்தலில் திமுக, மக்கள் நலக் கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கப் போகிறது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் எதிர்கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பது உறுதி.” என்றார் தடாலடியாக

ad

ad