ஜெயலலிதா பிறந்தநாள் பரிசு வழக்கின் உச்சநீதிமன்ற விசாரணையில் நாகேஷ்வரராவ் தனது வாதத்தில், ’’தமிழகத்தில் பொதுவாழ்வில் உள்ளவர்கள் பிறந்தநாள் பரிசு பெறுவது வழக்கமான ஒன்று. பிறந்தநாள் பரிசு பெறக்கூடாது என எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ‘’ நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் சந்தா இல்லை என்ற வாதத்தை ஏற்கக்கூடாது. வழக்கு சம்பந்தப்பட்ட காலத்தில் நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் சந்தா இருந்தது’’என்று தெரிவித்தார்.