புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஏப்., 2016

இன்று தமிழகம் வரும் பிரணாப் முகர்ஜிக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு

குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று
தமிழகம் வருகிறார். இதையொட்டி, மூன்று கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகளுக்கு, குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று பிற்பகல் குன்னூர் வருகிறார்.
போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் நினைவுத் தூணில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் அவர், பயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.
பட்டமளிப்பு விழாவுக்கு பின்னர் கோவை புறப்பட்டுச் செல்லும், அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி மூன்றுகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

ad

ad