புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2016

மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை – துமிந்த

சுதந்திரக் கட்சியின் தலைமையில் இம்முறை காலியில் நடைபெறும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத
 கட்சி உறுப்பினர்கள் மீது, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல், வேறு மே தினக் கூட்டங்களில் கலந்துகொள்வது கட்சியின் யாப்பை மீறும் செயலென தெரிவித்துள்ள அவர், கட்சியின் யாப்பின் பிரகாரம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.
கூட்டு எதிரணி என்பது தமது கட்சிக்கு உட்பட்ட விடயமல்லவென தெரிவித்துள்ளதோடு, கட்சியின் ஒழுக்கத்தை பாதுகாத்துக்கொண்டே அவர்களுக்கு எதிர்க்கட்சியில் அமர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார். எனினும், சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு நிகராக, தனித்து மே தினக் கூட்டமொன்றை நடத்தவுள்ளதாக கூட்டு எதிரணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Duminda_D

ad

ad