புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2016

மஹிந்தானந்தவின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்குமாறு உத்தரவு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் வங்கிக்கணக்குகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ஐந்து வங்கிகளுக்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீ.ஐ.டி.யினர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த உத்தரவை கொழும்பு சிரேஸ்ட நீதிவான் இன்று பிறப்பித்துள்ளார்.
அரசாங்க நிதிகளை துஸ்பிரயோகம் செய்தார் என்று குற்றச்சாட்டு மஹிந்தானந்த அளுத்கமகே மீது சுமத்தப்பட்டுள்ளது.
இதன்கீழ் ராஜகிரியவில் அவர் வீடு ஒன்றை நிர்மாணித்துள்ளதாகவும் சீ.ஐ.டி.யினர் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்
இந்த நிலையிலேயே வங்கிக்கணக்குகளை பரிசீலிக்குமாறு நீதிவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ad

ad