புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2016

தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால் என்ன நடக்கும் தெரியுமா..? -பிரேமலதா கணிப்பு

தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால் ஊழலே இல்லாத கூட்டணி அரசு அமையும் என்று பிரேமலதா கூறினார்.

சிவகாசி தொகுதியில் வீதிவீதியாக வேனில் சென்று பிரசாரம் மேற்கொண்ட பிரேமலதா, ''தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், எந்த கட்சியை பிளவு படுத்தலாம் என காத்திருக்கிறார். ஆனால், தே.மு.தி.க.வை எந்த கட்சியாலும் பிளவுபடுத்த முடியாது. ஏதோ ஒரு இரண்டு, மூன்று பேர் போனால் போகட்டும், கேப்டனுக்கு கோடிக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள்.
சிவகாசி தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ரவுடி போல் வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விடுத்த ராஜேந்திர பாலாஜியை நீங்கள் தோற்கடிக்க வேண்டும்.

அ.தி.மு.க., தி.மு.க.விற்கு மாற்றான மெகா கூட்டணியாக தே.மு.தி.க. மக்கள் நலக் கூட்டணி அமைந்துள்ளது. இதன் மூலம் இந்த தேர்தல் திருப்பு முனை தேர்தலாக விளங்கும். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், ஊழலே இல்லாத கூட்டணி அரசை தே.மு.தி.க. மக்கள் நலக் கூட்டணி அமைக்கும்" என்றார்.

ad

ad