புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2016

தஞ்சையில் தேர்தல் ஒத்திவைப்பு - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் 16.05.2016 திங்கள்கிழமை நடைபெற இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே 25ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ரெங்கசாமியும், திமுக சார்பில் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பணப்பட்டுவடா புகாரால் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, வரும் 23ஆம் தேதி வாக்குப்பதிவு, 25ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தவிர்த்து தமிழகத்தில் உள்ள மற்ற 232 தொகுதிகளுக்கும் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது.

ad

ad