கடந்த ஏப்ரல் 8-ம் தேதி மும்பையில் தொடங்கிய 9-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பெங்களூரு சின்ன சாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக வார்னர் 69, யுவராஜ் சிங் 38, பென் 39, தவான் 28 ரன்கள் எடுத்தனர். பெங்களுரு அணியில் அரவிந்த் 2 விக்கெட், ஜோர்டன் 3 விக்கெட் வீழ்த்தினர்.
பெங்களுரு அணி வெற்றி பெற 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதரபாத் அணி.