புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2016

நம் எல்லோரது தாகமும் ஒன்றுதான்! வட்டுக்கோட்டை 40 வாழ்த்துச் செய்தியில் மாவை சேனாதிராசா தெரிவிப்பு

ம் எல்லோரது தாகமும் ஒன்றுதான் என பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு அனுப்பியிருந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது எழுச்சி நிகழ்வுக்கான வாழ்த்துச் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாவை சேனாதிராசா அவர்கள் தெரிவித்துள்ளார்.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இருந்து நகர்ந்து விட்டோம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இந்திய ஊடகமொன்று கருத்து வெளியிட்டிருந்த நிலையில், மாவை சேனாதிராசாவின் இக்கருத்து வெளிப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது ஆண்டின் மைய எழுச்சி நிகழ்வு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் நியூ யோர்க்கில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வுக்கு பல்வேறு தமிழக அரசியல் தலைவர்கள், பன்னாட்டு பிரமுகர்கள், என பலரும் வாழ்த்துச் செய்திகளை வழங்கி வருகின்றனர்.
தனது உடல்நிலை காரணமாக நேரடியாக நியூ யோர்க்; நிகழ்வில் பங்கெடுத்துக் கொள்ள முடியாமை குறித்து பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு கடிதமூலம் தெரிவித்திருந்த மாவை சேனாதிராசா அவர்கள், நம் எல்லோரது தாகமும் ஒன்றுதான் என தனது வாழ்த்துச் செய்தியின் பிழிவாக தெரிவித்துள்ளார்.
தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை எனும் ஈழத் தமிழ்மக்களுடைய அரசியல் பெருவிருப்பின் வடிவமாக வட்டுக்கோட்டைத் தீர்மானம் அமைந்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது

ad

ad