தமிழகத்தில் 232 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. வாக்குப்பதிவு எந்திரங்கள் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங் களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ‘’ஒரு சில இடங்களில் நடைபெற்ற சிறுசிறு சம்பவங்கள் தவிர, அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. கட்சிகள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாக 10 ஆயிரம் ரூபாயுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதுகுளத்தூரில் வாக்குப்பதிவு எந்திரம் உடைக்கப்பட்டுள்ளது. வேடசந்தூரில் சரக்கு வாகனங் களில் வாக்காளர்களை ஏற்றி வந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’என்று தெரிவித் துள்ளார்.
அவர் மேலும், ‘’தேர்தலின்போது தேர்தல் அதிகாரி உள்பட 5 பேர் இயற்கை மரணம் அடைந்ததாக தகவல் வந்துள்ளது’’என்று கூறியுள்