புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மே, 2016

பொது எதிரணியின் தேசிய அமைப்பாளராகின்றார் பஷில் ராஜபக்ஷ?

பொது எதிரணியின் தேசிய அமைப்பாளராக மஹிந்தவின் சகோதரரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக
நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மே தினத்திற்கு பின்னர் பொது எதிரணியின் தேசிய அமைப்பாளர் பதவி பசில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அவ் அணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொது எதிரணியின் தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும செயற்பட்டு வருகின்ற நிலையில் நாடாளுமன்ற விவகாரங்கள் டலஸ் அழப்பெருமவிடம் ஒப்படைக்கப்பட்டு, பசிலுக்கு நாடாளுமன்றிற்கு வெளியிலான பணிகள் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.
கிருலப்பலனையில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தின் பின்னர் இந்தப் பொறுப்பு பசில் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதேவேளை, பொது எதிரணியில் பசில் ராஜபக்ஷ இணைத்துக் கொள்ளப்படுவதற்கு கடுமையான எதிர்ப்புக்கள்  காணப்படுவதும் இங்கு சுட்டிக்காட்டத்த்தக்கது.

ad

ad