ஈரோடு மாநகர மேயராக இருப்பவர் அதிமுகவைச்சேர்ந்த மல்லிகா பரமசிவம். இவரது தந்தை ஜெகநாதன். அதிமுகவில் 50-வதுவட்ட
அவைத்தலைவராக இருக்கிறார். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அதிமுகவின் தீவிர விசுவாசியாக இருந்த ஜெகநாதன் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்
இந்நிலையில் அதிமுகவில் ஜெயலலிதாவின் சர்வாதிகார போக்குக்கு இனிமேலும் எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் இறையாகக்கூடது என்று நேற்று மாலை பேராசியர் அன்பழகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.