புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மே, 2016

அதிமுக வேட்பாளர் தம்பியின் பண்ணை வீடு மற்றும் உதவியாளர் வீடுகளில் அதிகாரிகள் சோதனை


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் மாஜி திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரனும் அதிமுக வேட்பாளராக மாவட்ட  அவைத் தலைவர் ரெத்தினசபாபதியும் போட்டியிடுகின்றனர்.

     இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறந்தாங்கியில் பேசிய திருநாவுக்கரசர் அதிமுக தரப்பில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது சம்ந்தமாக வருமான வரித்துறைக்கு புகார் அளித்துள்ளேன் என்றார்.

    இதையடுத்து இன்று மாலை அதிமுக வேட்பாளரின் தம்பியும் சசிகலா குடும்பத்தோடு நடவடிக்கை எடுக்கப்பட்டு மணல் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவருமான மணமேல்குடி கார்த்திகேயனின் பண்ணைவீடான  பாளையப்பட்டு  கிராமத்து வீட்டிலும் அவரது உதவியாளர் மணமேல்குடி பழனி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரி பால் ஜவகர் தலைமையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ad

ad