புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2016

கருணாநிதியிடம் ஆசி பெற்ற நாரயணசாமி

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ள நாராயணசாமி திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்றார்.

மே 16 ஆம் தேதி புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களையும், திமுக 2 இடத்திலும் வெற்றி பெற்றது. இதனால் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி அங்கு அமைய உள்ளது.
இதனையடுத்து, புதுச்சேரி முதல்வராக, முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார்.  இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை  நேரில் சந்தித்து நாராயணசாமி ஆசி பெற்றார். மேலும், திமுக ஆதரவு கடிதத்தையையும் பெற்றார். அப்போது திமுக எம்பி கனிமொழி உடனிருந்தார்.
பின்பு, நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,  புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக, மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம்.
மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவோம். புதுச்சேரி மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம். இந்தியாவிலேயே புதுச்சேரியை முன்மாதிரி மாநிலமாக மாற்றிக்காட்டுவோம் என்றார்

ad

ad