புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2016

தோல்வி முகம் கண்ட பிரபலங்கள்.. அமைச்சர்களும் தப்பவில்லை

 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனையோ கருத்துக் கணிப்புகளும், தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளும் வெளிவந்தன.

ஆனால், மக்களின் தீர்ப்பு எப்போதுமே யாராலும் கணிக்க முடியாததாகவே இருக்கும் என்பதற்கு இந்த தேர்தலும் ஒரு முன்னுதாரணமாகவே அமைந்துவிட்டது.
அந்த வகையில், எத்தனையோ கட்சிகளின் கடும் போட்டிகளுக்கு இடையே இன்று அதிமுக மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், திமுக மற்றும் அதிமுக கட்சி தலைவர்களைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுமே தோல்விகளைத் தழுவியுள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரின் வெற்றி நிலவரம் இழுபறியிலேயே உள்ளது.

ad

ad