தாஜூடின் கொலை குறித்த வழக்கு விசாரணைகளுக்கு மொபிடெல் தொலைதொடர்பு நிறுவனம் உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும்,
இதனால் மொபிடெல் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு அழைப்பாணை விடுத்து இது குறித்து விசாரிக்குமாறும் அரச தரப்பு சட்டத்தரணி நீதவானிடம் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
நேற்று மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது குறித்த இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.