புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2016

10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

இந்தியா – ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது 20 ஒவர் போட்டியில், இந்தியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை
வீழ்த்தி வெற்றிப்பெற்றது.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 1-1 என இந்தியா சமன் செய்துள்ளது.
ஹராரேவில் இன்று தொடங்கிய போட்டியில், ஜிம்பாப்வே அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன் படி முதலில் துடுப்பாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 99 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜிம்பாப்வே வீரர் பீட்டர் மூர் 31 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் குல்கர்னி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
100 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 13.1 ஒவரில் விக்கெட் இழப்பின்றி 103 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் மன்தீப் சிங் 52* ஓட்டங்களும், லோகேஷ் ராகுல் 47* ஓட்டங்களும் குவித்தனர்.
இதன் மூலம் 20 ஒவர் தொடர்1-1 என சம நிலையை எட்டியுள்ளது. எதிர்வரும் ஜூன் 22ம் திகதி நடக்கும் கடைசி மற்றும் மூன்றாவது 20 ஒவர் போட்டியில் வெற்றிப்பெறும் அணியே தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad