புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2016

வைகோ யார்? 500 கோடி நிதி.கலைத்துவிடுங்கள்: விஜயகாந்த்துக்கு 14 மாவட்ட செயலாளர்கள் கடிதம் எழுதியதாக பரபரப்பு

தேமுதிகவின் 14 மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்தின் செயல்பாடுகளை விமர்சித்து கருத்து கூறியதுபோலவும், அதில் கட்சியை கலைத்துவிடுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது போலவும் வெளியான கடிதத்தால் தேமுதிகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் 104 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். இதையடுத்து, வேட்பாளர்களுக்கு விஜயகாந்த் பணம் கொடுத்தார். சில வேட்பாளர்கள் பணம் கேட்டு நச்சரித்ததால், கட்சியை கலைத்துவிடுவேன் என்று விஜயகாந்த் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகின. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஒன்றிய, நகர செயலாளர்களுடன் விஜய காந்த் கடந்த ஒரு வார காலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த சூழலில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் பேரில் விஜயகாந்தின் நடவடிக்கையையும், தேமுதிகவின் போக்கையும் விமர்சிக்கும் வண்ணம் விஜயகாந்த் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. இந்த கடிதங்களின் அனுப்புனர் முகவரியில் மக்கள் தேமுதிக தலைவரும், தேமுதிக முன்னாள் கொள்கை பரப்பு செயலாளருமான சந்திரகுமார் பெயர் இருந்தது.

தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ் (மேற்கு சென்னை), எஸ்.செந்தில்குமார் (திருச்சி தெற்கு), எஸ்.நித்யா (வேலூர் கிழக்கு), பி.சம்பத்குமார்(நாமக்கல்), வி.சந்திரன் (கிருஷ்ணகிரி), எஸ்.ஆர்.கே.பாலு (திண்டுக்கல் மேற்கு), வி.இளங்கோவன் (தருமபுரி), டி.சிவமுத்துக்குமார் (மதுரை மாநகர்), என்.தினேஷ் குமார் (திருப்பூர் வடக்கு), கே.ஜெயபால்(திருநெல்வேலி கிழக்கு), ஆர்.பாண்டியன் (கோவை வடக்கு), டி.ஜெகநாதன் (கன்னியாகுமரி கிழக்கு), துரை.காமராஜ் (பெரம்பலூர்), க.ராமசாமி (புதுக்கோட்டை) ஆகியோரின் பெயர் அந்த 6 பக்க கடிதத்தில் உள்ளது. ஆனால், அவர்களின் கையெழுத்து எதுவும் இடம்பெறவில்லை.

இந்த கடிதத்தில், “உங்களை சினிமாவில் பார்த்தும், நீங்கள பேசிய வசனத்தையும் நம்பித்தான் ரிசிகர்கள் ஆனோம். மன்றத்தில் உங்களோடு இருந்தவர்கள் ஆகட்டும் அல்லது தேமுதிக ஆரம்பித்த பிறகு கட்சியில் சேர்ந்தவர்கள் ஆகட்டும் யாருமே உங்களை சினிமாவில் ரசிக்காமல் உங்களோடு இணையவில்லை. கேப்டன் என்கிற தனி நபரை நம்பி மட்டுமே உங்களோடு இணைந்தோம். ஆனால் தற்போது ஒரு சிலரை நம்பித்தான் நீங்களே இருக்கிறீர்கள் என்று எண்ணும்போது நாங்கள் உங்களோடு இருக்க முடியாது என்பது தெரிகிறது.

தேர்தலுக்கு முன்பு நடந்த சிலவற்றை கூறுகிறோம். தேமுதிகவைப் பற்றி பேச வைகோ யார்? வேட்பாளர் பட்டியல் நாளை வெளிவரும் என்று சொல்ல திருமாவளவன் யார்? கேப்டன் தப்பு செய்தால் விடமாட்டோம் என்று சொல்லுவதற்கு வாசனும், ராமகிருஷ்ணனும், முத்தரசனும் யார்? அப்படியானால் அவர்கள் கட்டுப்பாட்டிலா தேமுதிக இருக்கிறது.

2006 தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டோம். அதில் 34 வேட்பாளராவது கட்சியில் இருக்கிறார்களா. 2009ல் 40 பேர் எம்பி தொகுதியில் தனித்து போட்டியிட்டோம். அதில் 4 வேட்பாளர்களாவது தற்போது கட்சியில் இருக்கிறார்களா.

2005ல் கட்சி ஆரம்பிக்கும்போது மாவட்ட செயலாளர், பொருளாளர் இருந்தார்கள். தற்போது அதில் யார் மாவட்டச் செயலாளராக இருக்கிறார்கள். கடந்த 11 ஆண்டில் தேமுதிக என்ற மாபெரும் கட்சியை காலியாக்கிவிட்டீர்கள். 

சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தேமுதிக மாநாடு நடத்துங்கள். நான் பணம் தருகிறேன் என்று கூறினீர்கள். ஆனால் மாநாடு முடிந்த பின்பு நீங்கள் எந்த மாவட்டத்திற்கும் மாநாடு நடத்தியதற்கான பணம் கொடுக்கவில்லை.

உங்கள் சுயநலத்திற்காக 10 வருடாக திமுகவையும், அதிமுகவையும் நாங்களும் எதிர்த்தோம். 2016ல் வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைத்த கதையாக திமுகவோடு கூட்டணி சேர போகிறோம் என்று சொல்லிவிட்டு மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தீர்கள். ஜெயலலிதாவை ஆட்சியில் இருந்து அகற்ற போகிறேன் என்று சொல்லிவிட்டு அதே ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர மிகப்பெரிய உதவி செய்தீர்கள். 

2005 முதல் 2016வரை கட்சி நிதி, தேர்தல் நிதி, வேட்பாளர் கட்டணம் என 500 கோடிக்கும் மேல் பணம் கிடைத்தது. அது எல்லாம் எங்கே போனது. கட்சி பெயரில் டிரஸ்ட் உள்ளது. ஆனால் கட்சிக்கும், டிரஸ்டிற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்பது எங்களுக்கு தெரியும். தேமுதிக டிரஸ்ட் என கட்சி பெயரை வைத்துக்கொண்டு, கட்சிக்கு வருகின்ற நன்கொடைகளை எல்லாம் இந்த டிரஸ்ட் பெயரில்தான் வாங்குகிறீர்கள். அந்3த டிரஸ்ட்டில் நீங்கள், அண்ணி, சுதீஷ் என மூன்று பேர் மட்டும் தான் இருக்கிறீர்கள். அதுவும் எங்களுக்கு தெரியும். 

கட்சி மாநாடு, மக்களுக்காக மக்கள் பணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என அனைத்தையும் நாங்கள் எங்கள் சொந்த செலவில் செய்தோம். என்றாவது ஒருநாள் யாராவது ஒரு மாவட்ட செயலாளரையாவது அழைத்து செலவிற்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டு இருக்கிறீர்களா.

தேமுதிக கட்சி துவங்கி யாருக்கும் லாபமில்லை. ஆனால் நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்குத்தான் லாபம். உங்கள் மனைவி எடுத்த தவறான முடிவால் கட்சியே காணாமல் போய்விட்டது. 

உங்களுக்கு பல ஆண்டுகாலம் உழைத்த எங்களைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் குடும்பத்தினருக்காக இப்படி ஒரு முடிவு எடுத்தீர்களே இது நியாயமா. அதன் விளைவு 10 1/2 சதவீதம் இருந்த வாக்கு 2 1/2 சதவீதமாக போனது. இத்தகைய பெரிய செயலுக்கு பிறகும் நாங்கள் மாவட்ட செயலாளராக தேமுதிகவில்  இருக்க வேண்டுமா. நீங்களே தேமுதிக கட்சியை கலைத்துவிடுங்கள். எங்களை பிழைக்க விடுங்கள். உங்கள் மீது உள்ள பாசத்தால் வெளியேற முடியாமல் தவிக்கிறோம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தேமுதிக மேற்கு சென்னை மாவட்ட செயலா ளர் ஏ.எம்.காமராஜ் கூறுகையில், “அந்த கடிதம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. விஜயகாந்த் மட்டுமே எனது தலைவர். கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்று யாரோ இப்படி செய்துள்ளனர். இது தொடர்பாக நாங்கள் விளக்கம் அளித்துவிட்டோம் என்றார்.

இது பற்றி சந்திரகுமார் கூறுகையில், “தேமுதிகவை விட்டு நாங்கள் வந்துவிட்டோம். அவர்களுக்கு கடிதம் அனுப்ப வேண்டிய அவசியம் எனக்கில்லை. வேண்டுமென்றே யாரோ எனது பெயரை பயன்படுத்தி இப்படி கடிதம் எழுதியுள்ளனர் என்றார்.வைகோ யார்? கட்சியை கலைத்துவிடுங்கள்: விஜயகாந்த்துக்கு 14 மாவட்ட செயலாளர்கள் கடிதம் எழுதியதாக பரபரப்பு



தேமுதிகவின் 14 மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்தின் செயல்பாடுகளை விமர்சித்து கருத்து கூறியதுபோலவும், அதில் கட்சியை கலைத்துவிடுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது போலவும் வெளியான கடிதத்தால் தேமுதிகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் 104 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். இதையடுத்து, வேட்பாளர்களுக்கு விஜயகாந்த் பணம் கொடுத்தார். சில வேட்பாளர்கள் பணம் கேட்டு நச்சரித்ததால், கட்சியை கலைத்துவிடுவேன் என்று விஜயகாந்த் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகின. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஒன்றிய, நகர செயலாளர்களுடன் விஜய காந்த் கடந்த ஒரு வார காலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த சூழலில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் பேரில் விஜயகாந்தின் நடவடிக்கையையும், தேமுதிகவின் போக்கையும் விமர்சிக்கும் வண்ணம் விஜயகாந்த் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. இந்த கடிதங்களின் அனுப்புனர் முகவரியில் மக்கள் தேமுதிக தலைவரும், தேமுதிக முன்னாள் கொள்கை பரப்பு செயலாளருமான சந்திரகுமார் பெயர் இருந்தது.

தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ் (மேற்கு சென்னை), எஸ்.செந்தில்குமார் (திருச்சி தெற்கு), எஸ்.நித்யா (வேலூர் கிழக்கு), பி.சம்பத்குமார்(நாமக்கல்), வி.சந்திரன் (கிருஷ்ணகிரி), எஸ்.ஆர்.கே.பாலு (திண்டுக்கல் மேற்கு), வி.இளங்கோவன் (தருமபுரி), டி.சிவமுத்துக்குமார் (மதுரை மாநகர்), என்.தினேஷ் குமார் (திருப்பூர் வடக்கு), கே.ஜெயபால்(திருநெல்வேலி கிழக்கு), ஆர்.பாண்டியன் (கோவை வடக்கு), டி.ஜெகநாதன் (கன்னியாகுமரி கிழக்கு), துரை.காமராஜ் (பெரம்பலூர்), க.ராமசாமி (புதுக்கோட்டை) ஆகியோரின் பெயர் அந்த 6 பக்க கடிதத்தில் உள்ளது. ஆனால், அவர்களின் கையெழுத்து எதுவும் இடம்பெறவில்லை.

இந்த கடிதத்தில், “உங்களை சினிமாவில் பார்த்தும், நீங்கள பேசிய வசனத்தையும் நம்பித்தான் ரிசிகர்கள் ஆனோம். மன்றத்தில் உங்களோடு இருந்தவர்கள் ஆகட்டும் அல்லது தேமுதிக ஆரம்பித்த பிறகு கட்சியில் சேர்ந்தவர்கள் ஆகட்டும் யாருமே உங்களை சினிமாவில் ரசிக்காமல் உங்களோடு இணையவில்லை. கேப்டன் என்கிற தனி நபரை நம்பி மட்டுமே உங்களோடு இணைந்தோம். ஆனால் தற்போது ஒரு சிலரை நம்பித்தான் நீங்களே இருக்கிறீர்கள் என்று எண்ணும்போது நாங்கள் உங்களோடு இருக்க முடியாது என்பது தெரிகிறது.

தேர்தலுக்கு முன்பு நடந்த சிலவற்றை கூறுகிறோம். தேமுதிகவைப் பற்றி பேச வைகோ யார்? வேட்பாளர் பட்டியல் நாளை வெளிவரும் என்று சொல்ல திருமாவளவன் யார்? கேப்டன் தப்பு செய்தால் விடமாட்டோம் என்று சொல்லுவதற்கு வாசனும், ராமகிருஷ்ணனும், முத்தரசனும் யார்? அப்படியானால் அவர்கள் கட்டுப்பாட்டிலா தேமுதிக இருக்கிறது.

2006 தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டோம். அதில் 34 வேட்பாளராவது கட்சியில் இருக்கிறார்களா. 2009ல் 40 பேர் எம்பி தொகுதியில் தனித்து போட்டியிட்டோம். அதில் 4 வேட்பாளர்களாவது தற்போது கட்சியில் இருக்கிறார்களா.

2005ல் கட்சி ஆரம்பிக்கும்போது மாவட்ட செயலாளர், பொருளாளர் இருந்தார்கள். தற்போது அதில் யார் மாவட்டச் செயலாளராக இருக்கிறார்கள். கடந்த 11 ஆண்டில் தேமுதிக என்ற மாபெரும் கட்சியை காலியாக்கிவிட்டீர்கள். 

சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தேமுதிக மாநாடு நடத்துங்கள். நான் பணம் தருகிறேன் என்று கூறினீர்கள். ஆனால் மாநாடு முடிந்த பின்பு நீங்கள் எந்த மாவட்டத்திற்கும் மாநாடு நடத்தியதற்கான பணம் கொடுக்கவில்லை.

உங்கள் சுயநலத்திற்காக 10 வருடாக திமுகவையும், அதிமுகவையும் நாங்களும் எதிர்த்தோம். 2016ல் வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைத்த கதையாக திமுகவோடு கூட்டணி சேர போகிறோம் என்று சொல்லிவிட்டு மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தீர்கள். ஜெயலலிதாவை ஆட்சியில் இருந்து அகற்ற போகிறேன் என்று சொல்லிவிட்டு அதே ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர மிகப்பெரிய உதவி செய்தீர்கள். 

2005 முதல் 2016வரை கட்சி நிதி, தேர்தல் நிதி, வேட்பாளர் கட்டணம் என 500 கோடிக்கும் மேல் பணம் கிடைத்தது. அது எல்லாம் எங்கே போனது. கட்சி பெயரில் டிரஸ்ட் உள்ளது. ஆனால் கட்சிக்கும், டிரஸ்டிற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்பது எங்களுக்கு தெரியும். தேமுதிக டிரஸ்ட் என கட்சி பெயரை வைத்துக்கொண்டு, கட்சிக்கு வருகின்ற நன்கொடைகளை எல்லாம் இந்த டிரஸ்ட் பெயரில்தான் வாங்குகிறீர்கள். அந்3த டிரஸ்ட்டில் நீங்கள், அண்ணி, சுதீஷ் என மூன்று பேர் மட்டும் தான் இருக்கிறீர்கள். அதுவும் எங்களுக்கு தெரியும். 

கட்சி மாநாடு, மக்களுக்காக மக்கள் பணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என அனைத்தையும் நாங்கள் எங்கள் சொந்த செலவில் செய்தோம். என்றாவது ஒருநாள் யாராவது ஒரு மாவட்ட செயலாளரையாவது அழைத்து செலவிற்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டு இருக்கிறீர்களா.

தேமுதிக கட்சி துவங்கி யாருக்கும் லாபமில்லை. ஆனால் நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்குத்தான் லாபம். உங்கள் மனைவி எடுத்த தவறான முடிவால் கட்சியே காணாமல் போய்விட்டது. 

உங்களுக்கு பல ஆண்டுகாலம் உழைத்த எங்களைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் குடும்பத்தினருக்காக இப்படி ஒரு முடிவு எடுத்தீர்களே இது நியாயமா. அதன் விளைவு 10 1/2 சதவீதம் இருந்த வாக்கு 2 1/2 சதவீதமாக போனது. இத்தகைய பெரிய செயலுக்கு பிறகும் நாங்கள் மாவட்ட செயலாளராக தேமுதிகவில்  இருக்க வேண்டுமா. நீங்களே தேமுதிக கட்சியை கலைத்துவிடுங்கள். எங்களை பிழைக்க விடுங்கள். உங்கள் மீது உள்ள பாசத்தால் வெளியேற முடியாமல் தவிக்கிறோம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தேமுதிக மேற்கு சென்னை மாவட்ட செயலா ளர் ஏ.எம்.காமராஜ் கூறுகையில், “அந்த கடிதம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. விஜயகாந்த் மட்டுமே எனது தலைவர். கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்று யாரோ இப்படி செய்துள்ளனர். இது தொடர்பாக நாங்கள் விளக்கம் அளித்துவிட்டோம் என்றார்.

இது பற்றி சந்திரகுமார் கூறுகையில், “தேமுதிகவை விட்டு நாங்கள் வந்துவிட்டோம். அவர்களுக்கு கடிதம் அனுப்ப வேண்டிய அவசியம் எனக்கில்லை. வேண்டுமென்றே யாரோ எனது பெயரை பயன்படுத்தி இப்படி கடிதம் எழுதியுள்ளனர் என்றார்.

ad

ad