சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கடந்த 25ஆம் தேதி எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டனர். இதையடுத்து சட்டப்பேரவை இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் தற்காலிக சபாநாயகர் செம்மலை தலைமையில் கூடியது. அப்போது சபாநாயகராக ப.தனபால், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதையடுத்து அவை முன்னவரான ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சபாநாயகரை அவரது ஆசனத்தில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.