கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பஸில் ரஜபக்ஸ பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதன் பிரகாரம், 20 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகள் இரண்டு மற்றும் ஒரு இலட்சம் ரூபா ரொக்கப்பிணையிலும் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.