புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2016

நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா இலங்கை காவல்துறையிடம் அகப்பட்டுள்ளார் திரிவுபடுத்தி இணையத்தளங்க

மரக்கடத்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தலைப்பிட்டு முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் கள்ள மரம் அறுத்து கடத்த
முற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா இலங்கை காவல்துறையிடம் அகப்பட்டுள்ளார். என உண்மைக்கு புறம்பான செய்தி இணையத்தளங்களில் வெளிவந்துள்ளது.
கடன் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்ட  JCB வாகனம் மல்லாவி ஊர்மிளா புடைவை வாணிப உருமையாளர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்களது அனிஞ்சியன்குளத்தில் உள்ள காணியை துப்பரவு செய்து கொண்டு இருக்கும் போதே வனவளப்பாதுகாப்பு திணைக்களத்தினரால் அவர்களுக்கு சொந்தமான காணியை துப்பரவு செய்துள்ளார்கள் என்ற அடிப்படையிலேயே அவரது துஊடீ வாகனம் முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச்செய்தியை திரிவுபடுத்தி உண்மைக்கு புறம்பாக இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான செய்திகள் வெளியிடும் போது ஊடகங்கள் உறுதிப்படுத்திய பின் வெளியிடுவது சாலச்சிறந்தது.

ad

ad