புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2016

தமிழர் பிரச்சினைக்கு ஜெயலலிதாவின் தீர்வுத்திட்டத்தில் தங்கியில்லை

தமிழர் பிரச்சினைக்கு ஜெயலலிதாவின் தீர்வுத் திட்டத்தில் தங்கியில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன்
தெரிவித்துள்ளதாக இந்தியன் எஸ்பிறஸ் தெரிவித்துள்ளது.
தேர்தலில் வெற்றியீட்டியமைக்காக தாம் வாழ்த்து தெரிவித்ததாகவும் உள்நோக்கம் எதுவும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு முழுக்க முழுக்க ஜெயலலிதா தீர்வுத் தி;ட்டமொன்றை வழங்குவார் என தங்கியிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாம் வேறும் தரப்பினரில் தங்கியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பிரிவிணைவாதத்தை தாம் கோரவில்லை எனவும் அதற்கான போராட்டங்கள் நடத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தமிழ் மக்களின் அடையாளங்களையும் உரிமைகளையும் இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad