கோவாவின் கடற்கரை நகரமான பனாஜியில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகைகள் உள்பட ஏராளமான பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனையின்போது சில முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களும், முன்னணி நடிகைகளும் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் காவல்துறையினர் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டனர். இதில் ஆனந்தகுமார் என்ற தரகரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவருடைய டைரியில் ஏராளமான நடிகைகள், அரசியல் பிரமுகர்களின் போன் நம்பர்கள் குறிக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்