புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2016

ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்த இலங்கை மக்களின் பங்களிப்பு அவசியம்!

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு அனைத்து இலங்கையர்களும் அர்த்தபூர்வமான பங்களிப்பினை வழங்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹுசெய்ன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வுகளின் ஆரம்ப உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தீர்மானங்களை அமுல்படுத்தும் போது அனைத்து இலங்கையர்களினதும் பங்களிப்பு அவசியமானது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முழு அளவிலான தந்திரோபாய அடிப்படையில் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அமர்வுகளின் இடையில் இலங்கை தொடர்பில் சயிட் அல் ஹூசெய்ன் வாய்மொழி மூல அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது

ad

ad