புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2016

அசோகமித்திரன், சோபாசக்தி, குமரகுருபரனுக்கு இயல் விருது


கனடாவில் செயல்படும் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் 2015ஆம் ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

குறுக்குவெட்டுகள் என்னும் கட்டுரைத் தொகுப்புக்காக அசோகமித்ரனுக்கு அபுனைவுப் பரிசு வழங்கப்படுகிறது. கண்டிவீரன் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக ஈழத்து எழுத்தாளர் சோபாசக்திக்கு இலக்கிய தோட்டத்தின் புனைவுப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

’மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக, குமரகுருபரனுக்கு கவிதைப் பரிசு தரப்படுகிறது. தேவிபாரதியின் சிறுகதைகளை ’farewell mahatma’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கும் ந.கல்யாணராமனுக்கு, மொழிபெயர்ப்புக்கான பரிசு வழங்கப்படுகிறது.

ad

ad