குறுக்குவெட்டுகள் என்னும் கட்டுரைத் தொகுப்புக்காக அசோகமித்ரனுக்கு அபுனைவுப் பரிசு வழங்கப்படுகிறது. கண்டிவீரன் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக ஈழத்து எழுத்தாளர் சோபாசக்திக்கு இலக்கிய தோட்டத்தின் புனைவுப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
’மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக, குமரகுருபரனுக்கு கவிதைப் பரிசு தரப்படுகிறது. தேவிபாரதியின் சிறுகதைகளை ’farewell mahatma’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கும் ந.கல்யாணராமனுக்கு, மொழிபெயர்ப்புக்கான பரிசு வழங்கப்படுகிறது.