புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2016

மட்டக்களப்பின் போர் என வர்ணிக்கப்படும் பாடுமீன்களின் சமர் போட்டியில் மத்திய கல்லூரி வெற்றி வாகை

மட்டக்களப்பின் போர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரிக்கும் மெதடிஸ் மத்திய கல்லூரிக்கும் இடையிலான
'பாடுமீன்கள் சமரில்' மெதடிஸ் மத்திய கல்லூரி வெற்றி பெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டியானது இன்று (05) கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய புனித மைக்கல் கல்லூரி 43.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 112 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மெதடிஸ் மத்திய கல்லூரி 23.1 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை வெற்றி இலக்கான 113 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது.
இந்த போட்டியில் சிறந்த வீரராக மெதடிஸ் மத்திய கல்லூரி வீரர் அபிஷேக் (43 ஓட்டங்கள்) தெரிவு செய்யப்பட்டார். போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக புனித மைக்கேல் கல்லூரி வீரர் பிரசன்னாவும் (28 ஓட்டங்கள்), சிறந்த பந்து வீச்சாளர்களாக மெதடிஸ் மத்திய கல்லூரி வீரர் தனுசாந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த போட்டியில் வெற்றி பெற்று மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லூரி இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவு செய்ப்பட்டுள்ளது.

ad

ad