புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2016

சென்னை தொழில் அதிபர் தீனதயாளன், திருட்டு சிலைகளை வாங்கியது அம்பலம்

தொழில் அதிபர் தீனதயாளன் கோவில்களில் திருடப்பட்ட சிலைகளை சட்டவிரோதமாக வாங்கி தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோவிலில் திருடப்பட்ட சிலைகளை அறநிலையத்துறை அதிகாரிகள் அடையாளம் காட்டினார்கள்.

அதிகாரிகள் ஆய்வு

தொழில் அதிபர் தீனதயாளன் வீட்டில் போலீசார் மீட்டுள்ள சிலைகளில் கோவில்களில் திருடப்பட்ட சிலைகள் உள்ளதா? என்று அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து வருகிறார்கள். நேற்று 3-வது நாளாக ஆய்வுப்பணி நடந்தது. 

கோவை, நெல்லை, மதுரை, சிவகங்கை ஆகிய மண்டலங்களில் இருந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று தீனதயாளன் வீட்டிற்கு வந்திருந்தனர். ஏராளமான கோவில் பூசாரிகளும் தீனதயாளன் வீட்டில் கூடிவிட்டார்கள். இதனால் கூட்டம் அலைமோதியது. தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களில் திருட்டுப் போன சிலைகள் தீனதயாளன் வீட்டில் இருக்கிறதா? என்று ஆய்வு செய்தனர்.

2 சிலைகள் கண்டுபிடிப்பு

நேற்று காலையில் தொடங்கிய இந்த ஆய்வு பணி மாலை வரை நீடித்தது. நேற்று முன்தினம் திருச்சி மண்டல அறநிலையத்துறை அதிகாரி கல்யாணி அவரது பகுதியில் உள்ள 2 கோவில்களில் திருட்டு போன சிலைகள் தீனதயாளன் வீட்டில் இருப்பதை கண்டுபிடித்தார். திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகாவில் உள்ள முல்லால் கிராமத்தில் உள்ள சிவலோகநாதர் கோவிலில் 10 வருடங்களுக்கு முன்பு சிவகாம சுந்தரி அம்மன் சிலை திருட்டு போய்விட்டது. இதேபோல பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் இருக்கும் அயன்பேரையூர் கிராமத்தில் உள்ள திருமுக்தீஸ்வரர் கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டு பிரம்மாவின் சிலையும் திருட்டு போய்விட்டது. 

இந்த 2 சிலைகளும் தீனதயாளன் வீட்டில் மீட்கப்பட்டுள்ள சிலைகளில் இருப்பதை அதிகாரி கல்யாணி அடையாளம் காட்டினார். இதன்மூலம் கோவில்களில் திருடப்பட்ட சிலைகளை தீனதயாளன் சட்டவிரோதமாக வாங்கி பதுக்கி வைத்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆய்வுப்பணி நடைபெற்று வருகிறது.

கைதாவாரா?

தீனதயாளன் வீட்டில் மீட்கப்பட்டுள்ள சிலைகளை மத்திய மாநில தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டுள்ளனர். இந்த சிலைகள் பழங்கால சிலைகள் தானா? என்பது பற்றி தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் அறிக்கை கொடுக்க வேண்டும்.

தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகளின் இந்த ஆய்வுஅறிக்கைக்காக போலீசார் காத்திருக்கிறார்கள். இந்த ஆய்வுஅறிக்கை கிடைத்தவுடன் போலீசார் அடுத்த கட்ட கைது நடவடிக்கையில் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது தீனதயாளன் வீட்டில் பணிபுரிந்த 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அடுத்தகட்டமாக தீனதயாளனும், அவருக்கு துணையாக இருந்த அதிகாரிகளும், முக்கிய பிரமுகர்களும் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

ad

ad