வவுனியாவில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வர்த்தகர் இன்று (22) மதியமளவில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வவுனியாவில் எஸ். எஸ். ஆர் என்ற பெயரில் வர்த்தக நிலையம் மற்றும் அரிசி ஆலை என்பவற்றை நடத்திவரும் இவர் நேற்று இரவு 7 மணியளவில் தனது வர்த்தக நிலையத்தில் இருந்து வீடுநோக்கி சென்றபோது கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் தீவிரமான மேற்கொண்டிருந்த நிலையில் இன்று மதியமளவில் வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் வைத்து அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அங்கிருந்த முச்சக்கரவண்டியொன்றில் வவுனியாவை வந்தடைந்ததாக தெரியவருகின்றது. இந்த நிலையில் குறித்த வர்த்தகரிடம் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை வவுனியா வர்த்தகர் சங்கத்தால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முழுகதவடைப்பு போராட்டமும் கைவிடப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்