புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2016

பரவிப்பாஞ்சான் காணிகளை விடுவிக்குமாறு இராணுவத்திற்கு கடிதம்

இன்றைய தினம்  பரவிப்பாஞ்சானில் உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி குறித்த காணியில் உள்ள இராணுவத்தினரிடம் அக் காணி உரிமையாளர்கள்
கடிதம் ஒன்றினையும் சமர்ப்பித்து தமது காணிகளைபார்வையிட அனுமதி கோரியிருந்தனர்.

இருப்பினும் கடித்தத்தை தமது உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாகபெற்றுக் கொண்ட குறித்த இராணுவ முகாம் மேஜர் அவர்களது காணியினைசென்று பார்வையிட முடியாது எனவும் அனுமதி கொடுப்பதற்கு தமக்குஅதிகாரம் இல்லை எனவும் கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

காணி உரிமையாளர்கள் 2015.10 .05 அன்று பரவிப்பாஞ்சானில் ஒருபகுதிகாணி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னமும் 54 குடும்பங்களின் காணிகள்விடுவிக்கப்படாமல் உள்ளதாகவும் அதில் இப்பொழுது 20 குடும்பங்கள்கிளிநொச்சியில் தாம் வாழ்வதற்கு காணிகள் இல்லாமல் வாடகைக்கும்,உறவினர்களது வீடுகளில் இருப்பதாகவும் குறைந்தது அந்த 20குடும்பங்களின் காணிகளையாவது முதலில் விடுவித்து தருமாறும் இதற்கானபதிலை ஒரு வாரத்துக்குள் அறியத்தருமாறும் குறித்த கடித்தத்தில் கோரிஉள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த கடிதத்தினை பார்வையிட்ட குறித்த இராணுவ முகாம் மேஜர் இக்கடிதத்தினை தமது உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி ஒருவாரத்திற்குள்அவர்கள் தகவல் தந்தால் உங்களுக்கு அறியத்தருவேன் என கூறினார்.

அத்தோடுதாம் இவ் இடத்தில் தற்காலிகமாக இருப்பதாகவும் தமக்கும் உங்களுக்கும்எவ்வித பிரச்சனைகளும் இல்லை எனவும் தமது உயர் அதிகாரிகள் இன்றுஇக்காணியில் இருந்து வெளியேறுங்கள் என கூறினால் இன்றே இக்காணிகளைநாம் உங்களிடம் கையளிப்போம் என தெரிவித்தார்.
இதற்க்கு காணி உரிமையாளர்கள் எவராயினும் இதற்கான நல்ல பதிலைஒருவாரத்திற்குள் பெற்றுத்தாருங்கள் பெற்றுத் தருவீர்கள் என்றநம்பிக்கையில் செல்வதாகவும் அவ்வாறு இல்லை என்றால் அடுத்ததாக நாம்அனைவரும் நீங்கள் காணியினை விடுவிக்கும் வரைக்கும் இவ் முகாம்முன்றலிலே இருப்போம் எனவும் தெரிவித்தனர்.

ad

ad