தமிழ் அரசியல் கைதிகள் மீது வழக்குத்தாக்கல் செய்யுங்கள் அல்லது அவர்களை விடுதலை செய்யுங்கள் என மாற்றுக்கொள்கைகளுக்கான
மையத்தின் நிறைவேற்று பணிப்பாளரும், நல்லிணக்கம் தொடர்பான விஷேட செயலணியின் செயலாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து வலியுறுத்தியுள்ளார்.
பதினைந்து வருடங்களுக்கு மேலாக அவர்களை சிறையில் வாடவைப்பது குற்றச்செயலாகும் எனவும் அவர்களின் நிலையை நினைத்து பார்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர்களை சிறைகளில் அடைத்து வைத்திருப்பது தொடர அனுமதிக்க கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் வானொலி ஒன்றிற்கு வழங்கிய விஷேட நேர்காணலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இரண்டு கொள்ளைகளை மேற்கொண்டிருக்கின்றது. ஒன்று அரசமைப்பு திருத்தம் மற்றையது இடைக்கால நீதி, எனினம் இந்த விடயங்களும் துரிதகதியில் இடம்பெறவில்லை என விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
எனினும் மக்கள் ஒன்றை கருத்திற்கொள்ள வேண்டும் போருக்கு ஆறு வருடங்களின் பின்னர் மெதுவான போக்கிலே சில விடயங்கள் இடம்பெற்று வருகின்றன.