புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூலை, 2016

ஆடி கார் ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனு: அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

சென்னை தரமணியில், மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் தொழிலாளி ஒருவர் இறந்த வழக்கில் கைது
செய்யப்பட்ட ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேத்துபட்டு பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகள் ஐஸ்வர்யா குடிபோதையில் கார் ஓட்டியதில் கடந்த 1ஆம் திகதி ராஜீவ் காந்தி சாலையில் வைத்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின் போது, திருவான்மியூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி முனுசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தசம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது புழல் மகளிர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா. ஜாமீன் மனு ஒன்றை சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை எடுத்துகொள்ளப்பட்டது. ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ad

ad