தனது மகன் நாமல் ராஜபக்சவுக்காக நீதிமன்றத்திலோ, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ முன்னிலையாக மாட்டேன் என்று
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னரே, மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.
நாமல் ராஜபக்சவின் சார்பில் நீதிமன்றத்திலோ, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ நான் முன்னிலையாக மாட்டேன்.
என்னுடைய மகனாக இருந்த போதிலும் அவர் ஒரு அரசியல்வாதி. பல அரசியல்வாதிகள் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர்.
அவர்களுக்காக நான் நீதிமன்றங்களுக்கோ, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கோ செல்லமாட்டேன்.