புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூலை, 2016

யுத்தத்தை நிறைவு செய்தவர் பொன்சேகாவே!கூறுகிறார் மங்கள

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை நிறைவு செய்தவர் மஹிந்த அல்லவென்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், முன்னாள் பாதுகாப்பு தளபதி சரத் பொன்சேகாவே யுத்தம் நிறைவடைந்தமைக்கு பிரதான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சந்திரிக்கா பண்டாரநாயக்க, டி.பி.விஜயதுங்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் யுத்தத்தின் பெரும்பாலான பகுதியை நிறைவுசெய்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், முல்லைத்தீவு காட்டில் குறைந்தளவு விடுதலைப் புலி உறுப்பினர்களே இருந்ததாகவும், அவர்களையும் அழித்து சரத் பொன்சேகாவே யுத்தத்தை வெற்றியடையச் செய்தவர் என்றும் அமைச்சர் மங்கள தெரிவித்துள்ளார்.

ad

ad