புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூலை, 2016

சுவாதி கொலையில் கைது செய்யப்பட்ட ராம்குமார் ஜாமின் கோரி மனுத்தாக்கல்


சுவாதி கொலையில் கைது செய்யப்பட்ட ராம்குமார் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24.06.2016 அன்று இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுவாதி என்ற இளம்பெண் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் நெல்லை மாவட்டம், மீனாட்சிப்புரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். போலீசார் தன்னை கைது செய்ய வருகிறார்கள் என்று அறிந்ததும் பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். தற்போது சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராம்குமாரை 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு ராயப்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில் கைதிகளுக்கான வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ad

ad