இலங்கை அரசாங்கம் யுத்தக் குற்றச் செயலில் ஈடுபட வில்லையென அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஆய்வு செய்யும் தூதுவரின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் மைக்கள் நியுட்டன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் யுத்த குற்றச் செயல்கள் தொடர்பான விசேட நிபுணரான பேராசிரியர் மைக்கள் நியுட்டன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் ஹுஸைனின் இலங்கை குறித்த குற்றச்சாட்டுக் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.