புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூலை, 2016

சுவாதியை கொன்றது ராம்குமார்தான் என நேரில் பார்த்தவர்கள் அடையாளம் காட்டியுள்ளதாக தகவல்?

சுவாதியை கொலை செய்தது ராம்குமார்தான் என கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் அடையாளம் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சங்கர் முன்னியில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில், இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் மற்றும் அவரைப் போல தோற்றம் கொண்ட சிலர் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டு, சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெட்டிக் கடை வைத்துள்ள சிவக்குமார் உள்ளிட்ட சாட்சிகள் கொலையாளியை அடையாளம் காட்டியுள்ளனர்.  

சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த அடையாள அணிவகுப்பில் ராம்குமார் முழு ஒத்துழைப்பு அளித்ததாக நீதிபதி சங்கர் தெரிவித்தார். 

அடையாள அணிவகுப்பில் சுவாதியை கொன்றது ராம்குமார்தான் என நேரில் பார்த்தவர்கள் அடையாளம் காட்டியுள்ளதாக போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள அறிக்கையில் இது குறித்த தகவல் இடம்பெறும் என தெரிகிறது

ad

ad