புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூலை, 2016

அரசியல்கைதிகளை விடுதலை செய்யக்கோரி மட்டுநகரில் கையெழுத்துவேட்டை

சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு நகரில் இன்று செவ்வாய்க்கிழமை  கையெழுத்து வேட்டை இடம்பெற்றது. 

சம உரிமை இயக்கத்தினால், மேற்கொள்ளப்பட்ட இந்த கையெழுத்து வேட்டை மட்டக்களப்பு தனியார் பஸ் தரிப்பிட நிலையத்திற்கு முன்பாக இடம் பெற்றது. 
சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும், இராணுவத்தினை முகாம்களுக்குள் மட்டுப்படுத்தி குடியிருப்புக்களில் இருந்து முகாம்களை அகற்ற வேண்டும், காணாமல்போன மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் துரிதமான விசாரணைகளை நடத்தி அது தொடர்பான விபரங்களை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த கையெழுத்து வேட்டை இடம்பெற்றது. 
காணாமல் போன மற்றும் கடத்தப்படவர்கள் தொடர்பாகவும், அரசியல் கைதிகள் தொடர்பாகவும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கச் செய்யும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களுக்கும் சென்று பொதுமக்களின் கையொப்பங்களை பெற்று கொள்ளவுள்ளதாக சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரி.கிருபாகரன் தெரிவித்தார்

ad

ad