நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான கொழும்பு நோக்கிய எதிர்ப்புப் பேரணி வரலாறு படைக்கும். பொது மக்கள் பல இலட்சம் பேர் மஹிந்த
ராஜபக் ஷ தலைமையில் ஒன்றிணைந்து புது யுகத்திற்கான சரித்திரம் படைப்பார்கள் என கூட்டு எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது.
நாட்டை நேசிக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும். குறிப்பாக அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு செய்வதறியாதுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான பக்தர்கள் வெளியில் வர வேண்டும்.
அப்போது தான் மக்கள் வழங்கிய ஆணைக்கு கௌரவம் கிடைக்கும். எவ்வாறாயினும் அனைத்து அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை தாண்டி கூட்டு எதிர்க் கட்சி மிக விரைவில் வெற்றியிலக்கை அடையும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
கண்டியில் இருந்து கொழும்பை நோக்கிய எதிர்ப்புப் பேரணி குறித்து ஏற்பாட்டுக் குழு உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தொடர்ந்தும் கூறுகையில்,
எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை கண்டி தலதா மாளிகையில் விஷேட வழிபாடுகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. இதில் மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க் கட்சியின் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அன்றைய தினம் மல்வத்து பீடத் தின் மகாநாயக்கரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் சர்வமதத் தலைவர்களையும் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மறுநாள் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கண்டி தலதா மாளிகைக்கு முன் பாக கொழும்பை நோக்கிய பேரணி ஆரம்பிக்கப்படும். முதல் நாள் மாவனெல்லை வரை பேரணி செல்லும். 29 ஆம் திகதி வெள் ளிக்கிழமை மாவனெல்லையில் இருந்து நெலுந்தெனியவை நோக்கி செல்லும். 30 ஆம் திகதி நெலுந்தெனியவில் இருந்து நிட்டம்புவ வரையில் பேரணி செல்லும். 31 ஆம் திகதி நிட்டம்புவவில் இருந்து கிரிபத்கொடை வரையில் செல்வதுடன் முதலாம் ஆம் திகதி கிரிபத்கொடையில் இருந்து கொழும்பை நோக்கி கூட்டு எதிர்க் கட்சியின் பேரணி செல்லும். அன்றைய தினம் கொழும்பில் கூட்டம் ஒன்றை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
6 விடயங்களை மையப்படுத்தியே இந்த எதிர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்படுகின்றது. புதிய அரசியலமைப்பில் நாட்டுக்கு எதிரான சதி, தேர்தல் ஒத்திவைப்பு, வரி அதிகரிப்பு, இந்தியாவுடனான ‘எட்கா’ ஒப்பந்தம், விவசாயிகளுக்கான மானிய ரத்து மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் ஆகியவற்றுக்கு எதிராகவே கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்புப் பேரணியை நடத்துகின்றது.
பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில், அரசாங்கத் திற்கு எதிரான இந்தப் பேரணியானது வர லாறு படைக்கும் என்றார்.