புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2016

முழங்காவில்விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் மீது இராணுவத் தலையீடு

முழங்காவில் விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் மீது தேவையற்ற இராணுவத் தலையீடுகள் காணப்படுவதாகவும் தாம் அவற்றை விரும்பவில்லை எனவும் விளையாட்டுக்கழக வீரர்களால் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் முறையிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் விநாயகர் விளையாட்டுக்கழக வீரர்களது வேண்டுகோளுக்கு இணங்க கடந்த வெள்ளிக் கிழமை விநாயகர் விளையாட்டுக்கழக மைதானத்தில் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிடம் விளையாட்டுக்கழகத்தினரால் தமது விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் மீது தேவையற்ற இராணுவத் தலையீடுகள் காணப்படுவதாகவும் இதற்குச் அரச உயரதிகாரிகள் சிலர் காரணமாக இருந்து செயற்படுவதாகவும் கூறிக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பு வாய்ந்த அரச உயரதிகாரிகள் சிலர் தமது விளையாட்டுக் கழகம், மைதானம் தொடர்பில் தம்மிடம் பேச வரும்போது இராணுவத்தினரையும் கூட்டி வருவதாகவும் தமது தரப்புக் கருத்துக்களை ஏற்காமல் இராணுவத்தினரின் கருத்துக்களைத்தான்  நீங்கள் கேட்க வேண்டும் அதன்படிதான் நடக்க வேண்டும் என கூறுவதாகவும் அதனால் தாம் தமது தரப்பு கருத்துக்களைச் சுயமாக முன்வைக்க அச்சப்படுவதாகவும் தமிழர்களாகவுள்ள பொறுப்பு வாய்ந்த அரச உயரதிகாரிகள் எதற்காக இராணுவத்தை அழைத்து வந்து அவர்களுடன் தம்மைச் சந்தித்துக் கதைக்க வேண்டும் எனவும் விளையாட்டுக் கழகத்தினரால் கேள்வி எழுப்பப்பட்டது.

விநாயகர் விளையாட்டுக்கழகத்தினர் கூறிய கருத்துக்களைக் கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கருத்துச் தெரிவிக்கையில் உங்களது கோரிக்கைகள் நியாயமானவை விளையாட்டுக்கழகங்கள் மீது இராணுவம் தலையிட வேண்டிய தேவைப்பாடு அவர்களுக்கு இல்லை. பொறுப்பு வாய்ந்த அரச உயரதிகாரிகள் இராணுவத்தினரை அழைத்து வந்து சாதாரண சிவில் விடயங்களில் இராணுவத்தினரைத் தலையிட வைக்க வேண்டிய தேவைப்பாடும் இல்லை. அவர்கள் அப்படிச் செய்ய முடியாது இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

முழங்காவில் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினருடனான சந்திப்பின் போது கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அமைப்பாளர் அ.வேழமாலிகிதன், பூநகரிப் பிரதேச அமைப்பார் ரஞ்சன், முழங்காவில் பிரதேச அமைப்பாளர் குவேந்திரன் முன்னாள் கரைச்சிப் பிரதேசசபை உறுப்பினர் சுப்பையா, விநாயகர் விளையாட்டுக் கழக தலைவர், செயலாளர் உட்பட்ட விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ad

ad