புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2016

கோப் குழுவின் விசாரணை வளையத்திற்குள் அரச நிறுவனங்கள்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், தேசிய ஒளிபரப்பு கூட்டுத்தாபனம், தேசிய லொத்தர் சபை மற்றும் இலங்கை காற்பந்து சம்மேளனம் ஆகியவற்றை   கோப் குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனங்களை அடுத்த வாரம் கோப் குழுவில் முன்னிலையாகுமாறு, கோப் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனங்கள் தொடர்பில், கணக்காய்வாளர் நாயகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம், இந் நிறுவனங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள்  குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற   கொடுக்கல் வாங்கல்கள்   தொடர்பில், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்கனவே ஒரு தடவை கோப் குழுவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

ad

ad