புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூலை, 2016

நாமலை பார்வையிட சிறைக்கு சென்ற சிரந்தியும் கூட்டு எதிர்க்கட்சியும்

வெலிக்கடை – மகசீன் சிறைசாலையில் உள்ள தனது மகன் நாமல் ராஜபக்சவை பார்வையிட அவரதுதாயார் சிரந்தி ராஜபக்ச
மற்றும் ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று காலை அங்கு சென்றுள்ளார்.
மெகசின் சிறைச்சாலையில் நாமல் ராஜபக்ஸ மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அங்குள்ள கைதிகளுக்கு உடற்பயிற்சிகளை பயிற்றுவிப்பதாகவும் ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தார்கள்.
நேற்று நாமல் அதே போல் நாளை யார் கைது செய்யப்படுவார்கள் என்று இதன்போது கூட்டு எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, தினேஸ் குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, பந்துலகுணவர்தன, ரோஹித அபேகுணவர்தன, கீதா குமாரசிங்க, சிசிர ஜயகொடி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரஞ்சித் த சொய்சா, மஹிந்தானந்த அளுத்கமகே, உதயகம்மன்பில உள்ளிட்ட பலர் இன்று மகசீன் சிறைசாலைக்கு சென்றுள்ளனர்.நாமலை பார்வையிட சிறைக்கு சென்ற சிரந்தியும் கூட்டு எதிர்க்கட்சியும்

ad

ad