புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2016

அனைத்துலக காணாமற்போனோர் நாளில் (ஆகத்து 30) ஈழத் தமிழருக்கு நீதி கோரி காலை 10:30 மணிக்கு , அடையாறு ஐ.நா. (யுனசுகோ) அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.

இலங்கை அரசே! இராணுவத்திடம் சரணடைந்த எமது தமிழ் உறவுகள் எங்கே?

அனைத்துலக காணாமற்போனோர் நாள் (International Day of the Disappeared) ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 30 ஆம் நாள் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகின்றது. கோசுடோரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமல் போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of the Detained-Disappeared, FEDEFAM) என்ற அரசு சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படுவதை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது. தற்பொழுது உலகின் பல நாடுகளிலும் பாதுகாப்புப் படையினராலோ அல்லது காவற்துறையினராலோ பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு காணாமல் போகும் மக்கள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களை மீட்டுத் தரக் கோரியும் இந்நாள் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகின்றது.
ஐ.நா ஆய்வு ஒன்றின் படி உலகிலேயே அதிக மக்கள் காணாமல் போனோர் நாடுகளின் பட்டியலில் இலங்கை அரசு இராண்டாவதாக இடம்பெற்றுள்ளது. ஈழத்திலும், இலங்கைத் தீவின் அனைத்து பகுதிகளிலும் சிங்கள பெளத்த பேரினவாத அரசு திட்டமிட்ட “வெள்ளை  வேன்” கடத்தலில் பல பத்தாண்டுகளாக ஈடுபட்டு வந்தது. இந்தக் கடத்தலில் காணாமல்போன ஈழத் தமிழர்களும், அரசுக்கு எதிராக செயல்பட்ட சிங்கள செயற்பாட்டாளர்களும் இன்று வரை வீடு திரும்பவில்லை.
முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு போரின் இறுதி நாட்களில் சிங்கள இராணுவத்திடம் சரணடைந்த, குடும்பத்தினரால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட போராளிகள், கிறித்துவ பாதிரியார்கள், மருத்துவ செயற்பாட்டாளர்கள் பலரை இன்று வரை இலங்கை அரசு குடும்பத்தினரிடம் மீள கையளிக்கவில்லை.  குடும்பத்தினர் தாங்கள் கையளித்தவர்களை எதிர்பார்த்திருக்க, ”காணாமல் போனவர்கள் அனைவரும் போரிலேயே கொல்லப்பட்டுவிட்டதாக” இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய இராசபக்சே கூறியுள்ளார். தற்பொழுதைய மைத்திரி அரசு இராணுவம் தங்கள் கட்டுப்பாட்டில் வந்த பிறகும் சரணடைந்த போராளிகள் பலரின் நிலை குறித்து தெளிவுபடுத்தாமல், ‘காணாமல் போனோர்  பணியகம்” ஒன்றை தொடங்கி காலம் கடத்த திட்டமிடுகின்றது.
அண்மையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை போரினால் காணாமல் போன 16,000 தமிழர்கள் குறித்து இலங்கை அரசு தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மே 17, 18, 19 ஆகிய நாட்களில் தாங்கள் இலங்கை இராணுவத்திடம் கையளித்த தங்கள் உறவுகளை விடுதலை செய்யக் கோரி அரசு அமைத்துள்ள பல “நல்லிணக்க குழுக்களிடமும்”, “இலங்கை அரசின் விசாரணை ஆணையங்களிடமும்” தொடர்ச்சியாக மக்கள் முறையிட்டு வருகின்றனர்.  “காணாமல் போனோர் உறவினர்” என்ற அமைப்பின் பெயரில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் பெண்கள் முன்னெடுத்து வருகின்றனர். இதுவரை இலங்கை அரசு தன்னிடம் கையளிக்கப்பட்ட  போராளிகளைவிடுவிக்கவும் இல்லை, அவர்களின் இருப்பிடத்தை தெளிவுபடுத்தவும் இல்லை.
யாரும் விரும்பி காணாமல் போவதில்லை, அரசால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். குற்றத்தை செய்த இலங்கை அரசோ காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழை வழங்கி அதில் ”இறப்புக்கு காரணம்: காணாமல் போனவர்” என குறிப்பிடும் வேலையை செய்து வருகின்றது. அது மட்டுமின்றி  காணாமற்போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகங்களைத் திறப்பதற்கான சட்டமூலத்தை இலங்கைஅரசு கடந்த 23 ஆம் நாள் நிறைவேற்றியுள்ளது.  அந்த அலுவலகங்களின் வாயிலாககாணாமற் போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதன் மூலம் நீதியின் கழுத்தை நெறித்துவிட முடியும் என்று   இலங்கைஅரசும் அதை பாதுகாக்க விரும்பும்மேற்குலகஅரசுகளும் கருதுகின்றனமொத்தத்தில் காணாமற்போனோர் பிரச்சனையில் சர்வதேச நாடுகளை ஏமாற்றிதன்னைப் பாதுகாத்து கொள்ளும்ஒரு முயற்சியே சரியாக ஆகஸ்டு மாதத்தில் இப்படியான அலுவலகம் திறப்பதாகும்.
இவ்வுலகில் பிறந்த 99% வீத மக்களுக்கும்  பிறப்பு இறப்பு தேதி தெரியும். இறந்தவர்களின் நாட்களை அனுசரிக்கும்  பழக்கம் தமிழ் மக்களுக்குஉண்டு. ஆனால்,காணாமற் போனோரைப் பொறுத்தவரை உறவுகள் இறந்தனரோ இருக்கிறார்களோ என்று தெரியாத நிலை என்பது விவரிக்க முடியாத துயரம். இந்த துயரத்தில் கணவனை இழந்த ஆயிரக்கணக்கான பெண்கள், பிள்ளைகளை இழந்த ஆயிரக்கணக்கான தாய் தகப்பன்மார்கள் என ஈழத் தமிழ் மக்கள் நடைபிணமாய் வாழ்ந்துவருகின்றனர்.

ad

ad