புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2016

கடந்த ஏழு மாதங்களில் வீதி விபத்துகளினால் 632 பேர் பலி

கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஆயிரத்து 632 பேர் பலியாகியுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இதில் 646 பேர் உந்துருளி விபத்துக்களினால் பலியானவர்கள்என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இதுதவிர, வாகன விபத்து காரணமாக நடைபாதையில் பயணித்த 459 பேரும் பலியாகினர்.

வாகன விபத்துக்களால் 246 பயணிகளும், 137 சாரதிகளும் பலியாகியுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

வீதியில் பயணிக்கும் போது, சாரதிகள் மாத்திரமின்றி அனைவரும் அவதானத்துடன் செயற்படும் பட்சத்தில் பெரும்பhலான விபத்துக்களை தவிர்த்துf; கொள்ள முடியும் என பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

ad

ad