புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2016

லங்கையின் பொருளாதாரத்தில் வடமாகாணத்தின் பங்களிப்பு மிக முக்கியம் : மத்திய வங்கி ஆளுநர்

லங்கையின் பொருளாதாரத்தில் வடமாகாணத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது எனவும் , வடக்கு மாகாணம் மொத்த தேசிய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.



நேற்றைய தினம் திங்கட்கிழமை முதலீட்டாளர்கள் சம்மேளன நிகழ்வில் கலந்து கொண்டு 
உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
 
இது தொடர்பில் மேலும் கூறுகையில், 

வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்திற்கு மத்தியிலும், சீனாவின் பொருளாதார மையங்கள் ஜரோப்பிய ஆசியப் பொருளாதார மையங்களுக்கு இடையில் இலங்கையின் பொருளாதாரம் பல சவால்களை எதிர்நோக்குவதாக அவர் கூறினார்.

தாழ் நிலை வருமானத்தில்  மட்ட நிலையில் இருந்த  இலங்கை தற்போது நடுநிலை வருமான மட்ட நாடாக வளர்ச்சியடைந்து விட்டதாகவும் தெரிவித்தவர், அபிவிருத்திக்கு முன் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவ நிலைக்கு மனித வளம் மாற்றப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

வளர்ச்சியடைந்த நாடுகளில் மொத்த தேசிய உற்பத்தியில் 90 சதவீதத்தை ஏற்றுமதியாகக் 
கொண்டவைகள்  மூலம் அதிக வருவாய் கிடைக்கின்றது. ஆனால் இலங்கையில் மொத்த தேசிய 
உற்பத்தியில் 17 சதவீதமானவையே ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு பயன்படுகின்றன எனவும் 
தெரிவித்தார். 

வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்தல், நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்தல், உள்ளுர் முதலீட்டாளர்களை ஊக்குவித்தல் போன்றவை கடன்படு சுமைக்கு உடனடித் தீர்வாக அமையும் எனவும் குறிப்பிட்டார். 


இந்திய, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் ஏற்படுத்தப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் எமது நாட்டின் தொழில்நுட்பத்துறை, முதலீட்டுத்துறை போன்றவற்றை மேலும் வளர்க்க உதவும் என கூறியவர், இந்தியா பாகிஸ்தானுடன் செய்யப்பட்ட சுதந்திர வர்த்த உடன்படிக்கையைப் போல் சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்க் கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். 

இதன் மூலம் தேசிய பொருளாதாரம் முன்னேற்றமடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் 
இந்தியா, சீனா, சிங்கப்பூர், யப்பான் போன்ற நாடுகள் இலங்கையின் முக்கிய நகரங்களில் 
தமது முதலீடுகளை மேற்க்கொள்ள ஆர்வமாகவுள்ள நிலையையும் சுட்டிக்காட்டினார். 

ஓன்றிணைக்கப்பட்ட இந்நாட்டில் தேசிய நல்லிணக்கத்தின் மிக முக்கிய தகுதியாக வடமாகாணத்தின் பொருளாதாரம் மீட்கப்பட வேண்டும். வட மாகாணத்தின் மீன்பிடித்துறை, வர்த்தகத்துறை வளர்ச்சி கண்டுள்ளமை இதற்கான நல்ல ஆரம்பநிலையைக் காட்டுகின்றது.
வடமாகாணத்தின் நியம வளர்ச்சி 2015ஆம் ஆண்டில் 12.1 சதவீதமாகக் காணப்படுகின்றது. எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

முதலீட்டு தொடர்பாக தேசிய மட்டத்திலும், வடமாகாணத்திலும் இருக்கக் கூடிய 
சந்தர்ப்பங்கள் பற்றியும், இலங்கையின் பொருளாதாரத்தில் வடமாகாணத்தின் பங்களிப்பு பற்றியும், 
முதலீட்டாளர்களுக்கு வடமாகாணத்திலே என்னென்ன தெரிவுகள் உள்ளன என்பது பற்றியும் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் எடுத்துரைத்தார்.  

ad

ad