புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2016

சிசுவைக் கைவிட்ட தாயும் மற்றொரு ஆணும் கைது

யாழ். வடலியடைப்பு பிள்ளையார் கோவில் வீதியில் பிறந்து 10 நாட்களேயான ஆண் சிசுவை பெட்டிக்குள் வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படும்  தாயை இன்று புதன்கிழமை கைதுசெய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அளவெட்டியைச் சேர்ந்த 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே கைதுசெய்யப்பட்டவராவார்

குறித்த பெண் வடலியடைப்பு பகுதியை சேர்ந்த திருமணமாகாத இளைஞருடன் பேணி வந்த தகாத உறவினால் குறித்த சிசு பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஏழ்மை காரணமாக குறித்த சிசுவை வடலிடையப்பிலுள்ள குறித்த இளைஞரின் வீட்டின் முன்னால் வைத்துவிட்டு சென்றதை குறித்த தாய் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து  குறித்த பெண்ணும் இளைஞரும் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.



ad

ad