புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2016

உள்ளக நீதிமன்ற கட்டமைப்பிற்குள்ளேயே உண்மையை கண்டறியும் ஆணைக்குழு

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவிற்கான சட்டமூலம் எதிர்வரும் ஒக ஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என வெளிவிவகார அமை ச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊகடவிலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் நிரந்தர அலுவலகம் அடுத்த மாதம் அமைக்கப்படும் என குறிப்பிட்டார்.

ஒக்டோபர் மாதத்தில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவிற்கான சட்ட மூலத்தை சமர்ப்பிக்க தவறும் பட்சத்தில், ஜனவரி மாதம் அந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறிதல் உள்ளிட்ட தகவல்களை கண்டறியும் நோக்குடன் கலந்துரையாடல் செயலணி நாடெங்கிலும் அமர்வுகளை நடத்திவருவதாக மங்கள சமரவீர கூறி யுள்ளார்.

இந்த கலந்துரையாடல்கள் நிறைவுபெற்ற பின்னர் குறித்த சட்டமூலத்தை தயாரிக்க முடியும் எனவும் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு உள்நாட்டு நீதிமன்ற கட்டமைப்பையே உள்ளடக்கி இருக்கும் என குறிப்பிட்ட அவர், அது கலப்பு நீதிமன்றத்தையோ சர்வதேச நீதிமன்றத்தையோ கொண்டிருக்கலாது என மீண்டும் வலியுறுத்தி யுள்ளார்.

அத்துடன் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விஜயத்தை முன்னிட்டே காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் அலுவலகம் அமைக்கப்படுவதாக வதந்திகள் பரவாது எனவும் வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்

அரசாங்கத்திலுள்ள அனைத்து தரப்பினருக்கும் சட்டமூலத்தில் உள்ளடங்கும் விடயங்கள் குறித்து நன்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் காணாமல் போனோ ரின் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக அது அமையும் எனவும் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கை அமைக்கவுள்ள பொறுப்புகூறல் கட்டமைப்பின் வடி வம் குறித்து கடந்த காலங்களில் முரணான கருத்துக்களை மங்கள சமரவீர வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad