புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2016

புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கு ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியலில் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையாளிகள் 12 பேரையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதிவரைக்கும் தொடர்ந்து விளக்கமறியலில்
வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் வை.எம்.எம்.ரியால் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கு இன்று செவ்வாக்கிழமை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது மன்றில் 12 கொலை குற்றவாளிகளும் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர். இவ்வழக்கினை விசாரணை செய்யும் குற்றப் புலனாய்வின் அதிகாரியும் மன்றில் தோண்றியிருந்தார்.
இருப்பினும் வித்தியாவின் வழங்கு விசாரணைகள் தொடர்பான அறிக்கைகள் எதனையும் குற்றப் புலனாய்வு அதிகாரி மன்றில் சமர்ப்பிக்கவில்லை.
இதனால் குறித்த வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதிவரைக்கம் விளக்கமறியலில் வைக்குமாறும், அதுவரைக்கும் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

ad

ad